Posts

மரப்பாச்சி கூடுகை எண் 22 - எழுத்தாளர் எஸ்.செந்தில்குமாருடன் சந்திப்பு

Image
எழுத்தாளர் எஸ். செந்தில்குமார் போடியைசொந்த ஊராக கொண்டவர். 2002 ஆம் ஆண்டு முதல் தமிழ் இலக்கிய சூழலில் இயங்கி வருபவர். இதுவரை ஆறு நாவல்கள் ஏழு சிறுகதை தொகுப்புகள், இரண்டு கவிதை தொகுப்புக்கள், சில தொகை நூல்கள் என தீவிரமாக இயங்கிவருபவர். ஆனாலும் அறியப்படாத எழுத்தாளர் என்றே சொல்ல வேண்டும். அவருடைய அண்மைய நாவல் 'கழுதைப் பாதை' சில ஆண்டுகள் உழைத்து உருவாக்கப்பட்ட படைப்பு. 1948-67 வரையிலான காலத்தில் நாவல் நிகழ்வதாக செந்தில்குமார் கூறினார். இதுவரையிலான மரபாச்சி எழுத்தாளர் சந்திப்புகள் ஒரு எழுத்தாளரின் அதுவரையிலான எல்லா படைப்புகளுக்கு உரியதாகவே இருந்துள்ளன. ஒரேயொரு படைப்பிற்கு கூட்டம் நடத்துவது இதுவே முதல்முறை.  நேற்று (1-3-20) இந்த நாவலுக்காக ஒரு கலந்துரையாடல் மற்றும் வாசிப்பு அரங்கை காரைக்குடி மரப்பாச்சி இலக்கியவட்டம் சார்பாக காவேரி மருத்துவமனையில் ஒருங்கிணைத்தோம். எஸ். செந்தில்குமார் மதியம் ஒன்றரை மணிக்கு வந்து சேர்ந்தார். உணவு உண்டு சிறிது ஓய்வெடுத்த பின்னர் மூன்றரை மணிக்கு நிகழ்வுக்கு வந்து சேர்ந்தோம். நேற்றைய கூடுகையில் பதினாறு பேர் பங்கு கொண்டார்கள். இக்கூடுகைக்காக ஐந்து

கார்த்திகை பாண்டியன் சந்திப்பு

Image
எழுத்தாளர் கார்த்திகை பாண்டியன் காரைக்குடி மரப்பாச்சி சந்திப்பிற்காக கோவையிலிருந்து ஜனவரி26 காலை காரைக்குடி வந்து சேர்ந்தார். மெய்யப்பா விடுதியில் காலை ஓய்வுக்கு பிறகு கவியரசு நேசனும் நானும் அவருடன் சேர்ந்து கொண்டோம். காலையுணவு முடித்து மூவருமாக அரியக்குடி கோவிலுக்கு சென்றோம். கானாடுகாத்தான் வழியாக திருமயம் சென்றோம். திருமயம் கோவில் நடை மூடியிருந்தது. மொத்த பயணமும் சுவாரசியமான உரையாடல்களால் நிரம்பியிருந்தது. மொழிபெயர்ப்பு விமர்சனம் வாசிப்பு சூழல் குறித்து பலவிஷயங்களை பகிர்ந்தார். மதிய உணவிற்கு பின் மாலை கூடுகை தொடங்கியது. மொத்தம் பதினாறு பேர் பங்கு கொண்டார்கள்.  பிரபாகரன் ஏன் அபத்தத்தை எழுத வேண்டும் எனும் கேள்வியுடன் விவாதம் தொடங்கியது. வாசகருக்கு ஒரு நிலைகுலைவை அமைதியின்மையை ஏற்படுத்தினால் என் கதைகள் வெற்றிபெற்றவை என்றார் காபா. அந்த தரிசனத்தை மரணத்தின் மீதான அச்சத்தின் வழியாகவும் பாலியல் சிக்கல்கள் வழியாகவும் அடைந்ததாக குறிப்பிட்டார். எனது ஆக்கங்கள் எல்லோருக்குமானவை அல்ல. அது வெகு சிலரை சென்று தொட்டால் போதும். அதுவே என் எதிர்பார்ப்பு என்றார். டாக்டர். ரவி கேட்ட கேள

மரப்பாச்சி இலக்கியவட்டம் கூடுகை 21

Image
ஜனவரி 26, 2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 முதல் எழுத்தாளர் மொழிபெயர்ப்பாளர் கார்த்திகை பாண்டியனுடன் காரைக்குடி காவேரி மருத்துவமனை நான்காம் தளத்தில் சந்திப்பு நிகழ இருக்கிறது. அனைவரையும் வருக என அழைக்கிறோம்.  கார்த்திகை பாண்டியன் பொறியாளராக பட்டம் பெற்றவர். பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக கோவையில் பணியாற்றி வருகிறார். வலசை இதழில் ஆசிரியராக இருந்தார்.  அவருடைய முதல் சிறுகதை தொகுப்பி 'மரநிற பட்டாம் பூச்சிகள்' சில ஆண்டுகளுக்கு முன் எதிர் வெளியீடாக வெளிவந்தது.  எருது, துண்டிக்கப்பட்ட தலையின் கதை, சுல்தானின் பீரங்கி - மொழியாக்க உலக சிறுகதைகள்   ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம் - மொழியாக்க நாவல்  நரகத்தில் ஒரு பருவகாலம் - மொழியாக்க கவிதை  கற்பனையான  உயிரிகளின் புத்தகம்-   போர்ஹெஸ் தொகை நூல்  இவையாவும் அவர் எழுதியவை. இவைத் தவிர்த்து விமர்சனங்களையும் எழுதி வருகிறார்.  https://padhaakai.com/2018/10/15/naroba-ivw-with-karthikai-pandian/  - நேர்காணல்  https://padhaakai.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4